சனி, 15 நவம்பர், 2008

பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


                                                                                                                                               பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இயக்குநர்கள்  சீமான்,அமீர், மற்றும் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர்  வைகோ,கண்ணப்பன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பெரியார்திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  கோவை மாவட்டம் பல்லடம் நகரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும் பெரியார் தி.க.வின் நகர தலைவர் துரைசாமி தலைமையில் தோழர்கள் திருமூர்த்தி, விஜயன், ஆறுமுகம், மயில்சாமி, முகில்ராசு, கார்த்திகேயன், சண்முகம் மற்றும்  அகிலன் உள்ளிட்ட 40 பேரை காவல்துறை கைது செய்தது.
  

கருத்துகள் இல்லை: