சனி, 15 நவம்பர், 2008

ஈரோட்டில் இராஜபக்ச வருகையை கண்டித்து பாடை ஊர்வலம்:86 பேர் கைது!



தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே!
பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர்.

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!


ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 9௧1௨008 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் சிரீராம் திரையரங்கம் முன்பு  பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில்  காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய,இலங்கை அரசுகளைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

இந்திய,இலங்கை அரசுகளைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...
இன்று (02.10.2008) ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


                                                                                                                                               பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இயக்குநர்கள்  சீமான்,அமீர், மற்றும் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர்  வைகோ,கண்ணப்பன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பெரியார்திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  கோவை மாவட்டம் பல்லடம் நகரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும் பெரியார் தி.க.வின் நகர தலைவர் துரைசாமி தலைமையில் தோழர்கள் திருமூர்த்தி, விஜயன், ஆறுமுகம், மயில்சாமி, முகில்ராசு, கார்த்திகேயன், சண்முகம் மற்றும்  அகிலன் உள்ளிட்ட 40 பேரை காவல்துறை கைது செய்தது.